விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த யான்ஸ் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் அதனை தான் நேரில் பார்த்ததாகவும் ஆனால் தற்போது அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லை எனவும் அவரின் மனைவி கூறியுள்ளார்.
இராணுவத்தினரிடம் சரணடைந்த புலிகளின் மன்னார் தளபதியின் தகவல்களில்லை: ஆணைக்குழு முன் மனைவி சாட்சி
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் வி.உருத்திரகுமாரன் ஆற்றிய உரை
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் இடம்பெற்ற மாவீரர் நாள் வணக்க நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் வி.உருத்திரகுமாரன் ஆற்றிய உரை
மாவீரர் நினைவோடு விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம்: உருத்திரகுமாரன் அறிக்கை!
தமிழீழ விடுதலைப் போரட்டத்துடன் எம்மை ஈடுபடுத்திக் கொள்வோமாக!
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவையின் அறிக்கை – 01
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பணத்தின் பின், நவம்பர் மாதம் 7ம், 13ம் திகதிகளில் தனது அமைச்சரவை அமர்வுகளை நடத்தியது. இந்த இரு அமர்வுகளிலும் கலந்துரையாடி எடுத்த முடிவுகளை முதலாவது ஊடக அறிக்கை மூலம் தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.
மாவீரர் நாள் கார்த்திகை 27 எம் தியாக தீபங்களுக்கான தினம்!
மாவீரர் நாள்இ தன் உயிரை எம் இனத்திற்ககுத் தருவதை ஓர் வரமாக எண்ணி செயற்பட்ட அந்த தியாக தீபங்களை நாம் நினைவுகூறும் நாள். கார்த்திகை மாதம் 27ம் திகதி எமது வரலாற்றுப் பயணத்தில் பல திருப்பு முனைகளிற்குக் காரணமான எம் அன்புத் தெய்வங்களை நாம் தரிசிக்கும் தினம்.
இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவீர் எங்கள் மக்களை…?
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே
இரண்டாம் அமர்வின் இறுதி நாளில் நடந்தது என்ன? நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளக்கம்!
சென்ற செப்டம்பர் 29 – அக்டோபர் 1 திகதிகளில் நியூ யார்க் நகரில் நடைபெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் அமர்வில் நடைபெற்ற நிகழ்சிகளை சில இணையத்தளங்கள் உண்மைக்குப் புறம்பான வகையில் செய்திகளை வெளியிட்டு வந்ததை பலரும் எமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் முகமாக இவ் அறிக்கையைப் பிரசுரிக்கின்றோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் கனேடிய தமிழ்சமூகமும் அகதிகளுக்காக ஒன்றாக அணிதிரள்கின்றது!
தமிழீழ விடுதலைப் போராளிகள் இந்தக் கப்பலில் இருக்கும் பட்சத்தில் ஜக்கிய நாடுகள் சபையின் போராளிகள் பாதுகாப்பு சரத்துக்களின் கீழ் சித்திரவதை மற்றும் வழமைக்குமாறான தண்டனைகளிலிருந்து பாதுகாப்புப்பெறும் தகைமையை அவர்கள் கொண்டுள்ளனர்.
நீதிக்கான பயணத்தில் வெற்றி பெற சிவந்தனுக்கு வாழ்த்துக்கள்! – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
இலங்கை பேரினவாத அரசினால் ஈழத் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த இன அழிப்பு வன்முறைகள், படுகொலைகள், கடத்தல், காணாமற் போகச் செய்தல், சட்டத்திற்கு புறம்பான கைதுகள், என்று அடிப்படை மனித உரிமை மீறல்கள், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், குறிப்பாக கடந்த வருடம் மே மாதம் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் மீதும், வெள்ளைக் கொடியுடன் சென்ற போராளிகள் மீதும், இலங்கை இனவாத அரசு மானுடத்திற்கு எதிரான வகையில் கடும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் கே.பி அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை! – திரு. வி. ருத்ரகுமாரன்
கேபி அவர்கள் மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டு சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து அவர் சிறிலங்கா அரசின் ஒரு கைதி. சிறிலங்காவில் தமிழர்கள் எவரும் கைதியாக இருந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் இயங்க முடியாது. கேபி அவர்களின் தற்போதய நிலையும் அப்படித்தான். மேலும், தற்போதுள்ள ஒரு சூழலில் அவர் சுயாதீனமானவராக இயங்குவதற்கான வாய்ப்புக்கள் அவருக்கு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இவரை சிறிலங்கா அரசு தனது திட்டங்களுக்குப் பயன்படுத்தக்கூடிய சூழல் இருப்பதனை நாம் கவனத்திற் கொண்டுள்ளோம்.